sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்

/

 40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்

 40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்

 40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 21, 2026 10:21 PM

Google News

ADDED : மார் 21, 2026 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 40 வைரங்களை, மாதவரத்தில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பறிமுதல் செய்தனர்.

மாதவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செயின்ட் ஆனிஸ் கல்லுாரி அருகே, ஜி.என்.டி., சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் இருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது, அதில் வந்தவரிடம் 40 வைரங்கள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்த வந்த காரில் 1.35 லட்சம் ரூபாய்; முகப்பேர், திருவள்ளுவர் சாலையில் சுஜித்ராஜா, 29, என்பவரிடம் 4.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த டாக்டர் சதீஷ்குமார், 47, என்பவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய், நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

அத்திப்பட்டைச் சேர்ந்த ரெடிங்ஸ்டன், 35, என்பவரிடம் இருந்து, முகப்பேர் மேற்கு பிரதான சாலையில், 3.50 லட்சம் ரூபாய்; சிந்தாதிரிப்பேட்டை, பிளாக்கர்ஸ் சாலை, கேசினோ திரையரங்கம் அருகே, சவுகார்பேட்டையைச் சேர்ந்த மலைராமன், 60, என்பவரிடம் 94,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வேளச்சேரி, கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளரான லோகநாதன், 45, எடுத்து வந்த 88,500 ரூபாய், வேளச்சேரி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டினம்பாக்கம், அய்யப்பன் கோவில் அருகே, 'மாருதி ஷிப்ட்' காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புரோட்டின் பவுடர் டப்பாக்கள் இருந்தன. இவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பவுடர் டப்பாக்கள் மற்றும் பணம், அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

ரூ.76 லட்சம் பறிமுதல் அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து, கோலடி சாலை வழியாக, திருவேற்காடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்ப, தனியார் வேன் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை, அம்பத்துாரைச் சேர்ந்த நாகேஷ், 52, என்பவர் ஓட்டி வந்தார். பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய பாதுகாவலர்கள் மற்றும் ஆவணங்களின்றி, 76 லட்சம் ரூபாய் எடுத்து வந்தது தெரிந்தது. பணத்துடன் அந்த வாகனத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அவற்றை ஆவடியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் சமர்பித்ததும், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us