ADDED : ஜூலை 02, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கபெருமாள் கோவில்,சிங்கபெருமாள் கோவில் அருகே, விவசாயியின் வீடு புகுந்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் அடுத்த வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 67; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, மாடு வாங்க வேலுார் சந்தைக்குச் சென்றுள்ளார். வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி, 54, மற்றும்மகள் இருந்துள்ளனர். இருவரும், வீட்டின் முன்பக்க வராண்டாவில் துாங்கிஉள்ளனர்.
நேற்று அதிகாலை 2:00 மணியளவில், விஜயலட்சுமி எழுந்து, வீட்டின் பின்பக்கம் உள்ள கழிப்பறைக்குச் சென்றபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் எட்டு பட்டு புடவைகள் திருட்டு போனது தெரிந்தது. செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.