sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

7 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' 47 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை

/

7 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' 47 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை

7 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' 47 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை

7 வயது சிறுமியிடம் 'சில்மிஷம்' 47 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : அக் 26, 2025 01:25 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சைதாப்பேட்டை அருகே, 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 47 வயது நபருக்கு, ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை, சைதாப்பேட்டை அருகே 7 வயது சிறுமி, 2021ல், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் வெங்கடேசன், 47, என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், சைதாப்பேட்டை மகளிர் போலீசில், புகார் அளித் தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின், ஜாமினில் வெளியே வந்தார்.

இவ்வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை, நீதிபதி எஸ்.பத்மா விசாரித்தார். போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் அனிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வெங்கடேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி, அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us