ADDED : ஏப் 17, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பவுடர் மில்ஸ் சாலையில், நேற்று காலை 8:00 மணியளவில், சிலர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டு, அவ்வழியாக சென்ற மக்களுக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.
தனிப்படை போலீசார் ஐந்து பேரையும் மடக்கி பிடித்து, பேசின் பிரிட்ஜ் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், புளியந்தோப்பு, சிவராஜபுரம் 3வது தெருவைச் சேர்ந்த அன்பு என்ற இளஞ்செழியன், 21, பார்த்திபன், 22, பிரவீன் ராஜ், 19, சுதேசி, 19, சஞ்சய், 23, என்பது தெரிந்தது. ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.