sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்

/

வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்

வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்

வீட்டில் 5 சவரன் நகை மாயம்: பழுது பார்க்க வந்தோர் மீது புகார்


ADDED : ஜூன் 12, 2024 05:53 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 05:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி, துளசிங்க பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சம்பத், 38. அவரது மனைவி ஸ்ரீதேவி, 34.

இரண்டு நாட்களுக்கு முன், இவரது வீட்டில் சுவர்களில் பழுது பார்பதற்காக, தெரிந்த நபர் வாயிலாக இருவர் வந்துள்ளனர். அவர்களிடம் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு, சம்பத் குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளனர்.

பழுதடைந்த பகுதிகளை சீரமைத்துவிட்டு, சாவியை இரும்பு கேட்டில் தொங்கவிட்டு, தகவல் சொல்லாமல் இருவரும் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்காக சாமி அறைக்கு ஸ்ரீதேவி சென்ற போது, அங்கு சில வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.

சந்தேகமடைந்து வீட்டை சோதித்த போது, 4 சவரன் செயின் மற்றும் 1 சவரன் கம்மல் காணாமல் போனது தெரியவந்தது.

பழுது பார்க்க வந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, சம்பத் அளித்த புகாரின் படி, ஜஸ் ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us