ADDED : மே 15, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் மகேஸ்வரன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், துணை கமிஷனர் மகேஸ்வரன், பொதுமக்களிடம் இருந்து, 50 மனுக்கள் நேரடியாக பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்த முகாமில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.