/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 53 பேர் மனு
/
காவலர் குறைதீர் முகாம் கமிஷனரிடம் 53 பேர் மனு
ADDED : ஜூன் 11, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, 5 ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள் உட்பட, 53 பேரிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் அருண், மனுக்களை பெற்றார்.
கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.
பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
முகாமில், துணை கமிஷனர் சுப்புலட்சுமி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.