sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை * நாடகம் ஆடிய 6 பேர் கைது

/

செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை * நாடகம் ஆடிய 6 பேர் கைது

செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை * நாடகம் ஆடிய 6 பேர் கைது

செக்ஸ் தொல்லை கொடுத்து கொடூரம் வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொலை * நாடகம் ஆடிய 6 பேர் கைது


ADDED : நவ 04, 2024 04:12 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை:அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வீட்டு வேலை செய்யும் சிறுமிக்கு, வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்ததும், ஒத்துழைக்க மறுத்ததால் கொடூரமாக கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, வீட்டு உரிமையாளர், அவரது மனைவி, உறவினர்கள் என, 6 பேரை போலீசார் கைது செய்தனர். போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது.

சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் முகமது நவாஸ், 40. இவர், வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி நாசியா, 30. இவர்களுக்கு, 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் முதல், தஞ்சாவூரைச் சேர்ந்த அருந்ததி தேவி, 15 என்ற சிறுமி, நவாஸ் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த தீபாவளி அன்று, குளிப்பதற்காக கழிப்பறைக்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததாகவும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிறுமி இறந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வீட்டு உரிமையாளர் உடனே போலீசிற்கு தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த ஒருநாளுக்கு பின், கடந்த 1ம் தேதி அமைந்தகரை போலீசுக்கு, தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தாமதமாக தகவல் தந்ததாலும், சிறுமியின் உடல் முழுதும் சிகரெட்டால் சூடு போட்டது போன்ற காயங்கள் இருந்ததாலும், சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

உறவினர் வாயிலாக சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்து, முறையாக சம்பளம் கொடுக்காமல் இருந்தனர். பெற்றோரை பார்க்கவும் சிறுமியை அனுமதிக்கவில்லை. சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் ரீதியான துன்புறுத்தல்களும் தொடர்ந்துள்ளது.

தீபாவளி நாளில் முகமது நவாஸ், அவரது மனைவி, நவாசின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில், சிறுமியை மயங்கி உயிரிழந்தது, விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினர். போக்சோ வழக்கும் பதிவு செய்து, முகமது நவாஸ், அவரது மனைவி நாசியா, நவாசின் நண்பர் லோகேஷ், 25, அவரது மனைவி ஜெயசக்தி, 24, உறவினர் சீமா பேகம், 29, மற்றொரு வீட்டு வேலை செய்த மகேஸ்வரி, 44 உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us