ADDED : ஆக 16, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
வில்லிவாக்கம்: தேவி பாலியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில், 745 பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற தேவி பாலியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா தொடங்கியது.
பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, அம்மனை வழிபட்டு, பக்தி பரவசத்துடன் 745 பேர் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
