sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.80 லட்சம் நில மோசடி கொளத்துார் நபர் கைது

/

ரூ.80 லட்சம் நில மோசடி கொளத்துார் நபர் கைது

ரூ.80 லட்சம் நில மோசடி கொளத்துார் நபர் கைது

ரூ.80 லட்சம் நில மோசடி கொளத்துார் நபர் கைது


ADDED : அக் 27, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 27, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஷீலா அப்பாவு, 60. இவர், ஜூலை 29ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார்.

அதன் விபரம்:

கேரளாவில் வசிக்கும் என் அண்ணன் பிலிப் ஜோசப் என்பவருடன் சேர்ந்து, 1999ல், அம்பத்துார், பட்டரவாக்கம், ஞானமூர்த்தி நகரில் 5,580 சதுர அடி நிலத்தை வாங்கி, இருவரும் தலா 2,790 சதுர அடியாக பிரித்து கொண்டோம்.

அண்ணன், அவரது நிலத்தை, நிலத்தரகர் வாயிலாக, கோவிந்தராஜ் என்பவருக்கு கடந்த 2022ல் விற்றுள்ளார்.

இந்நிலையில், அருகில் இருந்த என் நிலத்தையும், அதே நிலத்தரகர், போலியான ஆவணங்கள் தயாரித்து, கோவிந்தராஜுக்கே விற்றுள்ளார். மோசடி செய்யப்பட்ட என் நிலத்தின் மதிப்பு 80 லட்சம் ரூபாய். நிலத்தை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு நிலத்தை விற்ற, நிலத்தரகரான கொளத்துார், தங்கவேல் தெருவைச் சேர்ந்த பழனி, 44, என்பவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us