/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
/
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி
ADDED : மார் 16, 2024 12:07 AM

திரு.வி.க.நகர், பிராட்வேயில் இருந்து திரு.வி.க.நகர் செல்லும் தடம் எண்: 8பி மாநகர பேருந்தில், ஓட்டுனராக திண்டிவனத்தைச் சேர்ந்த தனசேகரன், 52, என்பவர் பணியில் இருந்தார்.
பெரம்பூர் சர்ச் நிறுத்தத்தில் இருந்து, கொடுங்கையூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த தியாகு என்பவரது மகன் விக்னேஷ் பேருந்தில் ஏறினார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி ஏறியபடி பயணம் செய்துள்ளார். பேருந்து, பெரம்பூர் எஸ்.ஆர்.பி., கோவில் தெரு மசூதி நிறுத்தத்தில் ஏறும்போது கால் தடுக்கி விழுந்தார். இதில், பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், பேருந்து நடத்துனரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன், 41, விக்னேஷை பலமுறை எச்சரித்துள்ளார்.
ஆனால் விக்னேஷ் அதை கேட்காமல், தொடர்ந்து படியிலேயே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திய விக்னேஷ், கிடைத்த வேலைகளை செய்து வந்தது தெரிய வந்தது.

