ADDED : மார் 08, 2024 12:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை, குரோம்பேட்டையில், அண்ணா பல்கலையின் கீழ் எம்.ஐ.டி., கல்லுாரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரிக்கு, நேற்று முன்தினம், 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து, எட்டு பேர் உடைய நிபுணர்கள், வாலி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வளாகம் முழுதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கல்லுாரி வளாகம், பல ஏக்கர் பரப்பளவு உடையது என்பதால், இச்சோதனை நள்ளிரவு 1:00 மணி வரை நீடித்தது. முடிவில், இது புரளி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

