sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்

/

'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்

'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்

'கோகைன்' வியாபாரியாக கொடிகட்டி பறந்த நைஜீரியர்


ADDED : பிப் 13, 2024 12:36 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, சென்னையில் பல்வேறு பகுதிகளில், 'கோகைன்' போதை பொருள் விற்ற வழக்கில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அஜாகுசினேடு ஓனாச்சி, 47, அவரது மனைவி லியோனி, 50, மற்றும் அமே சீயோன் இனலெக்வு, 40, ஆகியோர், அமைந்தகரை போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்களிடமிருந்து, 1.250 கிலோ கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், பிரதான குற்றவாளியான அஜாகுசினேடு ஓனாச்சியை, உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, கடந்த 30ம் தேதி, 14 நாட்கள் காவலில் போலீசார் விசாரித்தனர். பின், நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தெரியவந்ததாவது:

சென்னையில் முக்கிய தொழிலதிபர்களுக்கு, அஜாகுசினேடு ஓனாச்சி 'கோகைன்' விற்பனை செய்து வந்துள்ளார். அவர் பல்வேறு வங்கிகள் வாயிலாக, நைஜீரியாவுக்கு பணம் பரிமாற்றம் செய்திருப்பது தெரிந்தது.

அஜாகுசினேடு ஓனாச்சி சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் முக்கிய 'கோகைன்' வியாபாரியாக வலம் வந்துள்ளார். இவர் வாயிலாக தான் தமிழகம் முழுதும் கோகைன் விற்பனை நடந்து வந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us