sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திடீர் சூறைக்காற்று மழைக்கு ஆவடியில் சரிந்த நிழற்பந்தல்

/

திடீர் சூறைக்காற்று மழைக்கு ஆவடியில் சரிந்த நிழற்பந்தல்

திடீர் சூறைக்காற்று மழைக்கு ஆவடியில் சரிந்த நிழற்பந்தல்

திடீர் சூறைக்காற்று மழைக்கு ஆவடியில் சரிந்த நிழற்பந்தல்


ADDED : ஜூன் 09, 2025 02:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி மாநகராட்சி சார்பில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், ஆவடி செக் போஸ்ட், திருமுல்லைவாயில், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், தலா 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சாலையின் இருபுறமும் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. ஆவடியில், முதல் முறையாக அமைக்கப்பட்ட இந்த நிழற்பந்தலால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில், நேற்று பிற்பகல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த நிழற்பந்தல், சூறைக்காற்றில் திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சரிந்து விழுந்த நிழற்பந்தலை கிரேன் உதவியுடன் அகற்றினர்.

வாகன ஓட்டிகள் நலன் கருதி, சரிந்து விழுந்த பந்தல் மீண்டும் சீரமைத்து நிறுவப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தப்பிய கார்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர் மனோ, 40, என்பவர், தன் 'மாருதி பலேனோ' காரை, துவராஜ் என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார்.

நேற்று மதியம் வீசிய சூறைக்காற்றால், சாலையோரத்தில் இருந்த துாங்கு மூஞ்சி மரத்தின் கிளைகள், மின் கம்பியில் உடைந்து விழுந்தது. இதில், மின் கம்பி அறுந்து, மரக்கிளை கார் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, கார் உட்பட யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

மின்கம்பி அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us