sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடுத்தடுத்து 4 வீட்டில் தொடர் திருட்டு

/

அடுத்தடுத்து 4 வீட்டில் தொடர் திருட்டு

அடுத்தடுத்து 4 வீட்டில் தொடர் திருட்டு

அடுத்தடுத்து 4 வீட்டில் தொடர் திருட்டு


ADDED : நவ 13, 2024 09:56 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துாரை அடுத்த தரப்பாக்கம், கோல்டன் பேரடைஸ், கிருஷ்ணா கார்டன் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, அடுத்தடுத்து நான்கு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டதாக, குன்றத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று விசாரித்த போது, முருகன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.

இதேபோல, உபேந்திரா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 50,000 ரூபாய் திருடப்பட்டுள்ளது. மேலும் இரு வீடுகளில் பொருட்கள் ஏதும் இல்லாததால், திருடு போகவில்லை என தெரிந்தது.

அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இரும்பு ராடுடன் வந்த மர்ம நபர், முகத்தை மறைத்தபடி, வீடுகளின் பூட்டை உடைத்து திருடியது தெரிந்தது. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us