sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

/

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி

கன்டெய்னர் மோதி வாலிபர் பலி


ADDED : பிப் 13, 2024 12:37 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், கன்டெய்னர் லாரி மோதி, பைக்கில் பயணித்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மணலிபுதுநகர், கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 23; ஷிப்பிங் டிரான்ஸ்போர்டில் வேலை பார்த்தார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு தன் பைக்கில், மணலி விரைவு சாலை, கெனால் சாலை சந்திப்பில் சென்றார்.

அப்போது, சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, சந்திப்பில் திரும்ப முயன்ற போது, எதிரே பைக்கில் வந்த பிரசாந்த் மீது மோதியது.

இதில், லாரியின் சக்கரத்தில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தாங்காடு போலீசார், இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனரான, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் சிக்கர் வால், 37, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us