/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவர் இறந்த துக்கம் உயிரை துறந்த மனைவி
/
கணவர் இறந்த துக்கம் உயிரை துறந்த மனைவி
ADDED : ஜன 09, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, திருவேற்காடு, கோ- ஆப்ரேட்டிவ் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 45. இவரது தந்தை மணி, 72. தாய் பாரதி, 68; இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்.
இருவரும், அதே வீட்டின் கீழ்த்தளத்தில் தங்கி இருந்தனர்.இந்த நிலையில் மணி, உடல்நிலக்குறைவால் நேற்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அந்த துக்கம் தாங்காமல் அவரது மனைவி பாரதி நேற்று காலை படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.