sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்த சம்பவம் சிகிச்சை பலனின்றி பெண் பலி

/

மின்சாரம் பாய்ந்த சம்பவம் சிகிச்சை பலனின்றி பெண் பலி

மின்சாரம் பாய்ந்த சம்பவம் சிகிச்சை பலனின்றி பெண் பலி

மின்சாரம் பாய்ந்த சம்பவம் சிகிச்சை பலனின்றி பெண் பலி


ADDED : நவ 15, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாங்காடு, சென்னை அருகே, மாங்காடு சீனிவாசா நகர், அங்காளம்மன் கோவில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற, மாங்காடு நகராட்சி சார்பில், மின்மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி, 38, என்பவர், மின் மோட்டார் அருகே உள்ள தொட்டியில் மாட்டிற்கு தண்ணீர் ஊற்ற, கடந்த 2ம் தேதி சென்றார்.

அப்போது, சாந்தி மீது மின்சாரம் பாய்ந்து விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற சசிகலா, 36, மீதும் மின்சாரம் பாய்ந்தது. அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, மாங்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று சசிகலா வீடு திரும்பினார்.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த சாந்தி, நேற்று, சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

மாங்காடு நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், பெண் இறந்ததாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us