/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையால் விபரீதம் தவறி விழுந்து வாலிபர் பலி
/
போதையால் விபரீதம் தவறி விழுந்து வாலிபர் பலி
ADDED : ஜன 22, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்நெய்வேலியைச் சேர்ந்தவர் முருகன், 34. தாம்பரத்தில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, தாம்பரம், முடிச்சூர் சாலையில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில், மது அருந்திவிட்டு மாடியில் படுத்து துாங்கினார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.