/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்
/
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபர்
ADDED : ஏப் 19, 2025 11:50 PM

அரும்பாக்கம், அரும்பாக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரில், மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபரின் சேவை, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரும்பாக்கம், உத்தாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட், 35; தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் செடன் ராயன், 9. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த 16ம் தேதி மாலை, பள்ளி முடிந்து அதே பகுதியில் உள்ள மங்கள் நகர், ஒன்றாவது தெரு வழியாக, சிறுவன் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால், நீரில் கால் வைத்து விளையாடியபடி செல்லும்போது, அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி அருகே மின்சாரம் பாய்ந்து, திடீரென கீழே சுருண்டு விழுந்து துடிதுடித்துள்ளார்.
அந்நேரம், பைக்கில் வந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன், 23, என்பவர், வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டி கீழே போட்டுவிட்டு, சிறுவன் அருகில் சென்றார்.
உயிருக்கு போராடிய சிறுவனை, கண்ணன் துரிதமாக செயல்பட்டு லாவகமாக மீட்டார். இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' வீடியோ காட்சிகள், நேற்று காலை வெளியாகி அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சிறுவன் செடன் ராயன் கையில் லேசான காயங்களுடன் நலமுடன் இருக்கிறார்.
கண்ணன் மட்டும் அந்த நேரத்தில் வரவில்லையெனில், என் மகனை உயிரோடு பார்த்திருக்க முடியாது; கடவுள் போல் வந்து காப்பாற்றினார். இதுபோன்ற விபரீதங்கள் நடக்காதவாறு, அரசு செயல்பட வேண்டும்.
- ராபர்ட்,
சிறுவனின் தந்தை.