/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
ADDED : செப் 20, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 27. இவர், கொலை முயற்சி வழக்கில் கடலாடி போலீசாரால் தேடப்பட்டு வந்தார். அதேநேரம், வெளிநாட்டில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 2:50 மணிக்கு ஒமன் தலைநகர் மஸ்கட்டில் சென்னை வந்த விமானத்தில், மாரிமுத்து வந்தார். ஆவணங்களை சரிபார்த்த குடியுரிமை அதிகாரிகள், அவர் தேடப்படும் குற்றவாளி என்பதை அறிந்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் மாரிமுத்து ஒப்படைக்கப்பட்டார்.