UPDATED : ஜூன் 17, 2026 09:07 PM
ADDED : ஜூன் 17, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
அண்ணாசாலை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்து தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணாசாலை போலீசார், 2021ம் ஆண்டு ஜீவா, 19, என்பவரை கத்தியால் குத்தி, கொலை செய்ய முயன்ற வழக்கில், ராயப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக், 23, என்பவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்தவர் தலைமறைவானார். நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததை அடுத்து, ஏப்., 23ம் தேதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த கார்த்திக்கை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
