sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.5.81 கோடியில் 'ஏசி' மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது

/

ரூ.5.81 கோடியில் 'ஏசி' மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது

ரூ.5.81 கோடியில் 'ஏசி' மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது

ரூ.5.81 கோடியில் 'ஏசி' மண்டபம் சோழிங்கநல்லுாரில் வருகிறது


ADDED : ஜன 30, 2024 12:05 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, ஓ.எம்.ஆர்., பொன்னியம்மன் கோவில் முதல் தெருவில், 21,700 சதுர அடி பரப்பு உடைய மாநகராட்சி இடம் உள்ளது. இதில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மண்டபம் உள்ளது.

மிகவும் பழுதடைந்த இம்மண்டபத்தை இடித்து, 'ஏசி' மண்டபம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, 5.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், 16,776 சதுர அடி பரப்பில் இரண்டு மாடி உடைய கட்டடம் கட்டப்படுகிறது. முதல் மாடியில் 400 பேர் அமரக்கூடிய உணவு பரிமாறும் இடம், இரண்டாம் மாடியில் 800 பேர் அமரக்கூடிய நிகழ்ச்சி அரங்கம் அமைக்கப்படுகிறது.

தரைதளத்தில், 35 கார் மற்றும் 70 இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணி இம்மாத இறுதிக்குள் துவங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மண்டபம் வந்ததும் ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த வாடகையில் 'ஏசி' மண்டபத்தை பயன்படுத்த முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us