sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆச்சி மசாலா உணவு தொழிற்சாலை ரூ.150 கோடியில் கும்மிடியில் துவக்கம்

/

ஆச்சி மசாலா உணவு தொழிற்சாலை ரூ.150 கோடியில் கும்மிடியில் துவக்கம்

ஆச்சி மசாலா உணவு தொழிற்சாலை ரூ.150 கோடியில் கும்மிடியில் துவக்கம்

ஆச்சி மசாலா உணவு தொழிற்சாலை ரூ.150 கோடியில் கும்மிடியில் துவக்கம்


ADDED : செப் 20, 2024 12:37 AM

Google News

ADDED : செப் 20, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், உலக அளவிலான இந்திய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி, டில்லியில் நேற்று துவங்கியது. தொடர்ந்து, நாடு முழுதும், புதிய உணவு தொழிற்சாலையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்தார்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் கட்டப்பட்ட, உணவு மசாலா நிறுவனமான ஆச்சி மசாலா நிறுவனத்தின் உணவு தொழிற்சாலையையும் பிரதமர் மோடி திறந்தார்.

ஆச்சி மசாலா குழும தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக் பேசியதாவது:

ஆச்சி மசாலா நிறுவனம் துவங்கி, 25 ஆண்டுகளில், 22 மாநிலங்களில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கிருந்து, 220 வகையான உணவு பொருட்கள் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனா தொற்று காலத்தில், அனைத்து தொழில்களும் நலிவடைந்தன. அப்போது பிரதமர், 'பி.எல்.ஐ.,' எனும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை முன்வைத்தார்.

இத்திட்டத்தால், உள்நாட்டில் உற்பத்தி திறன் அதிகரித்து, ஏற்றுமதியை பெருக்க முடியும் என தெரிவித்தார். அந்த வகையில், முக்கியத்துவம் வாய்ந்த உணவு பதப்படுத்தும் துறையில், ஆச்சி உணவு குழுமத்தை, மத்திய அரசு தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடிக்கும், உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்திற்கும் நன்றி. மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்பில், 1.15 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய தொழிற்சாலையால் 400 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஊறுகாய் முதல் 'ரெடி டூ ஈட்' உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ஆச்சி குழும நிர்வாக இயக்குனர்கள் அஸ்வின்பாண்டியன், அபிஷேக் ஆப்ரகாம், தெல்மா ஐசக் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us