ADDED : பிப் 19, 2024 01:47 AM
அ நிறம் | அளவு
கொடுங்கையூர்:வடமாநிலங்களில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை கூரியரில் வரவைத்து, மர்ம நபர்கள் போதைக்காக பயன்படுத்தப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு டிச., 29ம் தேதி தகவல் கிடைத்தது.
கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
இதில், 19 வயது முதல் 24 வயது வரையிலான ஏழு பேர் கும்பல் சிக்கியது. தலைமறைவான மூவரை தேடி வந்தனர்.
இரு மாதங்களாக தலைமறைவான இருந்த திருத்தணியைச் சேர்ந்த நவீன், 23, உட்பட மூவரை, கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
