/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர் - கடற்கரைக்கு இன்று கூடுதல் பஸ்கள்
/
எழும்பூர் - கடற்கரைக்கு இன்று கூடுதல் பஸ்கள்
ADDED : அக் 27, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் தண்டவாளம் மற்றும் யார்டு மேம்பாட்டு பணிகள் இன்று நடக்க உள்ளதால், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், வழக்கமான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு - பூங்கா ரயில் நிலையம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பயணியர் தேவையின் அடிப்படையில், எழும்பூர் - கடற்கரை தடத்தில், கூடுதல் மாநகர பஸ்கள் இயக்கப்படும். தற்போது, கூடுதலாக ஆறு பஸ்கள் இயக்க அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பயணியருக்கு பாதிப்பு இல்லாமல், பஸ்கள் இயக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.