/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - பிராங்க்பர்ட் நகருக்கு கூடுதல் விமான சேவை துவக்கம்
/
சென்னை - பிராங்க்பர்ட் நகருக்கு கூடுதல் விமான சேவை துவக்கம்
சென்னை - பிராங்க்பர்ட் நகருக்கு கூடுதல் விமான சேவை துவக்கம்
சென்னை - பிராங்க்பர்ட் நகருக்கு கூடுதல் விமான சேவை துவக்கம்
ADDED : ஜன 14, 2026 05:12 AM
சென்னை: சென்னையில் இருந்து, ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகருக்கு கூடுதல் விமான சேவையை, லுப்தான்ஸா விமான நிறுவனம் துவங்க உள்ளது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, குவைத், பாங்காக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு, தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில், விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய நகரமான பிராங்க்பர்ட்டுக்கு, லுப்தான்ஸா நிறுவனம், வாரத்திற்கு ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கி வந்தது.
இந்த மார்க்கத்தில் பயணியர் அதிகம் செல்வதால், இருக்கைகள் முழுதும் நிரம்பி வந்தன. அதனால் விமான சேவையை அதிகரிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து பிராங்க்பர்ட் நகருக்கு, ஐந்தில் இருந்து ஏழு நாட்களாக அதிகரித்து வாரம் முழுதும் விமான சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 29ம் தேதி முதல், தினசரி விமானங்கள் இயக்கப்பட உள்ளது. கோடை கால அட்டவனை அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

