/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்
/
ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் கும்பாபிேஷகம்
ADDED : மார் 16, 2025 10:02 PM
சாலிகிராமம்:சென்னை சாலிகிராமம் முத்துக்குமரப்பா தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது.
இச்சக்திபீடத்தின் திருகுடமுழுக்கு விழா, 13 ம் தேதி மாலை 4:00 மணிக்கு, குரு பூஜையுடன் துவங்கியது.
பின், 14 ம் தேதி காலை 10:00 மணிக்கு, கோபுர கலச ஸ்தாபிதம் செய்யப்பட்டது. தெடார்ந்து 15 ம் தேதி காலை 7:30 மணிக்கு சக்தி கொடி ஏற்றுதல், காலை 10:45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை, மாலை 5:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை, இரவு 7:30 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜையை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு மேல்மருத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் திருக்குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார்.
தொடர்ந்து மதியம் அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகவும் நடந்தது.