sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்

/

பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்

பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்

பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்


ADDED : ஜூன் 05, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பிராட்வேயில் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகத்தை, 566.59 கோடி ரூபாயில் அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னை பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் புதுப்பிப்பு, பல்வேறு வசதிகளுடன் நவீன பஸ் நிலையம், வணிக வளாகம் என ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகத்தை, 566.59 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், இந்த பணியை, பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்த நிகழ்வு சென்னையில் நேற்று நடந்தது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன தலைவர் சித்திக் முன்னிலையில், நிறுவன இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவன பொறியியல் குழு பொது மேலாளர் சஞ்சய் பட்டாசார்யா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்தின் திட்ட மேலாண்மை இயக்குனர் ரவி குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வர்த்தக வளாகங்களுடன் இணைந்து அமையவுள்ளது. இந்த பஸ் முனைய பணிகள், 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.

அதே நேரத்தில், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டிடம் பணிகள், 30 மாதங்களுக்குள் நிறைவடையும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பம்சங்கள்

* பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாக கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில், 73 பஸ் நிறுத்தங்கள் அமையும்; ஒரே நேரத்தில் 3,250 பேர் பயன்படுத்தலாம். கட்டிடத்தில் இரண்டு முதல் எட்டாம் தளம் வரை அலுவலகங்கள் அமையும்* குறளகம் கட்டிடத்தில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் சில்லறை வணிக இடங்கள் அமைக்கப்படும். மூன்று முதல் ஒன்பதாவது தளம் வரை, அலுவலக இடங்கள் அமைக்கப்படும்.








      Dinamalar
      Follow us