sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்

/

அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்

அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்

அமைச்சர் ராஜாவுக்கு எதிராக போலீசில் அ.தி.மு.க., புகார்


ADDED : ஜூன் 21, 2025 12:18 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க., பொதுச்செயலருமான பழனிசாமி குறித்து, ஆபாசமாக கேலிச்சித்திரம் வெளியிட்ட, அமைச்சர் ராஜா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று, அ.தி.மு,க., வழக்கறிஞர்கள் பிரிவு இணைச் செயலர் பாலமுருகன் அளித்துள்ள புகார்:

'எக்ஸ்' என்ற சமூக வலைதளத்தில், தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பதிவுகளை பார்த்தேன்.

அப்போது, எங்கள் கட்சி பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், அரை நிர்வாண கோலத்தில், மிகவும் கீழ்த்தரமாக கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த கேலிச்சித்திரத்தை மக்களிடம் பரப்பி, இரண்டு கட்சிகளுக்கிடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இதனால், சட்டம் ஒழுங்கை சீர்கொடுக்கும் நோக்கத்துடன் நடந்துள்ளனர்.

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு, தற்போது தொழில்துறை அமைச்சராக உள்ள ராஜாதான் தலைவர். இந்த ஆபாச கேலிச்சித்திரம் தொடர்பாக, அவரையும், பின்னணியில் உள்ள நபர்களையும் சட்ட ரீதியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us