sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு துடைப்பத்தால் அடி

/

படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு துடைப்பத்தால் அடி

படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு துடைப்பத்தால் அடி

படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு துடைப்பத்தால் அடி


ADDED : ஜன 31, 2025 12:26 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் :காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்தவர் பொன்னம்பலம், 60; அ.தி.மு.க.,வில், குன்றத்துார் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர்.

இவரது வீட்டின் மேல் தளத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், தன் தோழிகளுடன் வாடகைக்கு தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

அ.தி.மு.க., பிரமுகர் பொன்னம்பலம், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி, அடிக்கடி 'லவ் டார்ச்சர்' செய்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண், வீட்டை காலி செய்து, படப்பையில் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். எனினும், அந்த பெண்ணை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இளம்பெண் தங்கியிருந்த வீட்டிற்கும், வேலைக்கு செல்லும்போது அவரது பின்னால் சென்றும், மொபைல் போனில் ஆபாசமாகவும், பொன்னம்பலம் பேசி வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண், அவரது தோழிகள் சேர்ந்து, நேற்று வீட்டிற்கு வந்த பொன்னம்பலத்தை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கினர். பின், அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து அந்த பெண், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன், மணிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று, அ.தி.மு.க., பிரமுகர் பொன்னம்பலம் மீது புகார் அளித்தார்.

மணிமங்கலம் போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலம் பாதிப்பு காரணம் கூறி, வழக்கறிஞர்கள் வாதிட்டதையடுத்து, பொன்னம்பலம் சொந்த ஜாமினில், நேற்று மாலை விடுவிக்கப்பட்டார்.

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட பொன்னம் பலத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப் பிலிருந்து நீக்குவதாக அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us