/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆலந்துார் ' அம்மா ' உணவகம் பழனிசாமிக்கு அமைச்சர் விளக்கம்
/
ஆலந்துார் ' அம்மா ' உணவகம் பழனிசாமிக்கு அமைச்சர் விளக்கம்
ஆலந்துார் ' அம்மா ' உணவகம் பழனிசாமிக்கு அமைச்சர் விளக்கம்
ஆலந்துார் ' அம்மா ' உணவகம் பழனிசாமிக்கு அமைச்சர் விளக்கம்
ADDED : செப் 21, 2024 12:33 AM

சென்னை,
''ஆலந்துார் அருகே உள்ள அம்மா உணவகத்தை மூடக்கூடாது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை மறுத்து, அமைச்சர் அன்பரசன் விளக்கம் அளித்துள்ளார்.
'இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரசு பிரதிநிதிகள் 'அம்மா' உணவக அமைப்பை, தங்கள் நாடுகளில் துவங்க விரும்புகின்றனர்.
ஆனால், சென்னை, ஆலந்துார் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், அரசு பள்ளி இயங்கி வருவதாக செய்தி வந்துள்ளது. வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்லும் தமிழக முதல்வர், உடனடியாக ஆலந்துார் அருகே உள்ள அம்மா உணவகத்தை மேம்படுத்தி நடத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வேறு பாதுகாப்பான இடத்தை வழங்க வேண்டும்' என, பழனிசாமி கூறியிருந்தார்.
'அ.தி.மு.க., ஆட்சியில் செயல்பட்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கி வருவதாகவும்' அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பழனிசாமியின் அறிக்கைக்கு விளக்கம் அளித்து, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் கூறியதாவது:
வாணுவம்பேட்டை, சிதம்பரம்தெருவில் மாநகராட்சியின் சென்னை துவக்கப்பள்ளி, நியாயவிலைக்கடை, அங்காவடிமையம், அம்மா உணவகம் அடுத்தடுத்து உள்ளன. அங்கன்வாடியில், 25 குழந்தைகள் உள்ளனர்.
மாநகராட்சி பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதால், 1.40 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த மாதம் துவங்கியது. அடுத்த சில மாதங்களுக்குள் பள்ளி கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு விடும்.
அங்கு படிக்கும் மாணவ, மாணவியர் வசதிக்காக, அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போதிய இடம் இருப்தால், அதன் ஒரு பகுதியில் தற்காலிகமாக துவக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிக்கு, அம்மா உணவகத்தின் நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதனை மேலோட்டமாக பார்த்து, அ.தி.மு.க.,வினர் அம்மா உணவகத்தில் பள்ளி நடப்பதாக கூறியுள்ளனர்.
அம்மா உணவகம் சிறந்த முறையில் நடக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, மெட்ரோ ரயில் பணியாளர்களும் அங்கு உணவருந்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.