sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு

/

கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு

கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு

கடப்பாக்கம் ஏரி சீரமைப்பு ரூ.58.33 கோடி ஒதுக்கீடு


ADDED : மார் 16, 2024 12:20 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

மழைக்காலத்தில் பெரு வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தவும், மழைநீர் கடலில் சென்றடைவதை தடுத்து, நீர்நிலைகளில் சேமிக்கவும், சென்னை மாநகராட்சி, பல்வேறு நீர்நிலைகளை சீரமைத்து காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணியின் ஒரு பகுதியாக, ஆசிய வளர்ச்சி வங்கி, உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதியில், கடப்பாக்கம் ஏரியில் சீரமைப்பு பணியை, 58.33 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏரியை துார் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தி அமைத்து, ஏரியின் கொள்ளளவை மூன்று மடங்காக அதிகரிக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதகுகள் சீரமைத்தல், பல்லுயிர் வாழ்விடங்களை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏரிக்கரையில் பசுமை தோட்டம் மற்றும் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணியால், ஏரியைச் சுற்றியுள்ளப் பகுதிகளில், மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும்.

ஏரி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு, சீரான பாசன வசதி செய்து தரப்படும் என, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us