sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்

/

 விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்

 விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்

 விவேகானந்தா கல்லுாரியில் கூடி முன்னாள் மாணவர்கள் குதுாகலம்


ADDED : டிச 21, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கலாசாரம், பாரம்பரியம் குறித்த பாடப்பிரிவை, விவேகானந்தா கல்லுாரியி ல் நடைமுறைப்படுத்த வேண்டும்,'' என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் நரசிம்மன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லுாரியின், சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அக்கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

தலைமை விருந்தினராக, சண்டிகர், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் முன்னாள் கவர்னரும், விவேகானந்தா கல்லுாரியின் முன்னாள் மாணவருமான நரசிம்மன் பேசியதாவது:

நம் பாரம்பரியம் குறித்து நமக்கே சிலர் பாடம் எடுக்கின்றனர். நாம் எப்போதும் பாரம்பரியம் நிறைந்தவர்கள். நம் முன்னோர் காலத்தில் இருந்தே பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறோம். தற்போது, அதற்கு சில இடையூறுகள் வருகின்றன. அவற்றை நாம் சரியாக எதிர்கொள்ள வேண்டும்.

இளைஞர்கள் மத்தியில், இதுகுறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். கலாசாரம், பாரம்பரிய ம் குறித்த பாடப்பிரிவை, இக்கல்லுாரியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

நம் கடமைகளில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பிறர் மூளைச்சலவை செய்வதற்கு இடமளிக்காமல், உறுதியாக இருந்தால் நம் வாழ்வை மேம்படுத்தலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொழிலதிபரும், கல்லுாரியின் முன்னாள் மாணவருமான ஹரிஹரன் பேசுகையில், ''முன்னாள் மாணவர்கள் பலர் கல்லுாரிக்கு நிதி உதவி, பிற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சேவை மேலும் அதிகரிக்க வேண்டும்,'' என்றார்.

இந்நிகழ்ச்சியில், கல்லுாரி செயலர் சுவாமி தியானகம்யானந்தா மஹராஜ், பேராசிரியர்கள் மற்றும் 1946ம் ஆண்டு படித்த மாணவர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் சந்தித்து, கல்லுாரி நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us