/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண் குறித்து அவதுாறு முதியவர் கைது
/
இளம்பெண் குறித்து அவதுாறு முதியவர் கைது
ADDED : பிப் 09, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது பெண். இவருக்கு 18 வயது இருக்கும்போது, பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் கருணாகரன், 51, என்பவர், அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் படி, கடந்த 2023 ல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இளம் பெண் குறித்து, திருமணம் செய்ய இருந்த மாப்பிள்ளையிடம் கருணாகரன் அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நின்றது. புகாரின்படி புளியந்தோப்பு மகளிர் போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த கருணாகரனை நேற்று கைது செய்தனர்.