/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'
/
அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'
அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'
அன்புமணி பேட்டி - 'மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்!'
ADDED : பிப் 16, 2024 12:18 AM
அரசு வேலைகளில் 1 சதவீத இட ஒதுக்கீடு, பார்வையற்றோருக்கு டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக சிறப்புத் தேர்வு உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், இரண்டாவது நாளாக மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அவர்களை கைது செய்த காவல் துறை, இரவு முழுதும் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்ததுடன், அதிகாலை 3:30 மணிக்கு, சென்னையிலிருந்து 50 கி.மீ.,க்கு அப்பால் உள்ள வல்லக்கோட்டையில் இறக்கி விட்டுள்ளனர். தங்களை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்ட ராமராஜன் என்ற மாற்றுத்திறனாளியை, காவல் துறையினர் அடித்து, உதைத்துள்ளனர். இவை அனைத்தும் மன்னிக்க முடியாத மனிதநேயமற்ற செயல்.
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்.