sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது

/

ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது

ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது

ரூ.1.50 லட்சம் திருட்டு ஆந்திர வாலிபர் கைது


ADDED : ஏப் 17, 2025 12:29 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, திருமுல்லைவாயில், செந்தில் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி, 48; அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஸ்ரீதேவி, 2023 டிச., 19ல் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். கீழ்தளத்தில் வசிக்கும் மாமியார் பிரபாவதி, 63, ஆந்திர மாநிலத்தில் உள்ள மகளை பார்க்க சென்றார்.

இரண்டு நாட்கள் கழித்து, இருவரும் வீடு திரும்பியபோது, பிரபாவதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.

இதுகுறித்து, திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். ஆந்திர மாநிலம், சேரி நரசன்னபாலம் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி வல்லுாரி சதீஷ்குமார், 36, திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அம்பத்துாரில் வேலை செய்து வந்த அவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில், 16 மாதங்களுக்குப்பின் திருட்டு ஆசாமி சிக்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us