sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு 'சீல்' விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

/

செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு 'சீல்' விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு 'சீல்' விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை

செல்லப்பிராணிகள் காப்பகத்துக்கு 'சீல்' விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை


ADDED : பிப் 23, 2024 12:39 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை சென்னை புறநகரில் பல்வேறு இடங்களில், தனியார் விலங்குகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை, கட்டண அடிப்படையில் இவை பராமரித்து வருகின்றன.

இந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், கார்டியன் விலங்குகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்க முடியாத நிலையில் இருப்போர், அவற்றை இங்கு ஒப்படைக்கின்றனர். அவர்களிடம் கட்டணம் வசூலித்து, செல்லப் பிராணிகளை இதன் நிர்வாகிகள் பராமரிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்கு விடப்பட்ட செல்லப் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என, பிராணிகள் நல வாரியத்துக்கு புகார் வந்தது.

இதுகுறித்து, தமிழக விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட அறிக்கை:

ஒரகடத்தில், தனியார் காப்பகத்தில் செல்லப் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக புகார் வந்தது.

இங்குள்ள விலங்குகள் முறையான உணவு இன்றி தவிப்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில், அந்த காப்பக நிர்வாகிகளுக்கு 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டது.

நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் துணையுடன் அந்த காப்பகம் நேற்று, 'சீல்' வைக்கப்பட்டது.

அங்கிருந்து மீட்கப்பட்ட விலங்குகள், வேறு இடங்களில் முறையான அங்கீகாரத்துடன் செயல்படும் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த காப்பக நிர்வாகிகள் மீது, வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us