sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சி.எம்.டி.ஏ.,வில் 12 பொறியாளர்கள் நியமனம் 10 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

/

சி.எம்.டி.ஏ.,வில் 12 பொறியாளர்கள் நியமனம் 10 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வில் 12 பொறியாளர்கள் நியமனம் 10 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

சி.எம்.டி.ஏ.,வில் 12 பொறியாளர்கள் நியமனம் 10 ஆண்டுக்கு பின் நடவடிக்கை


ADDED : பிப் 12, 2024 01:45 AM

Google News

ADDED : பிப் 12, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், 10 ஆண்டுகளுக்கு பின் 12 உதவி பொறியாளர்களுக்கு நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

சி.எம்.டி.ஏ.,வில் கட்டுமான பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு தேவையான எண்ணிக்கையில் உதவி பொறியாளர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், சி.எம்.டி.ஏ.,வில் நிரந்தர பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பொறுப்பு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, உதவி பொறியாளர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதில் தகுதி அடிப்படையில், தேர்வான 12 பொறியாளர்கள், சி.எம்.டி.ஏ.,வில் உதவி பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்களுக்கான பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. கடந்த, 2013ல் 2 பேர் உதவி பொறியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதன் பின், தற்போது, 10 ஆண்டுகள் கழித்து 12 பேர் பொறியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

சி.எம்.டி.ஏ.,வில் பல்வேறு பிரிவுகளில் தகுதி உடைய நபர்களுக்கு, உரிய காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவதில்லை.

இதனால், சீனியர் பிளானர், துணை திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவை நிரப்பப்படாமல், வேண்டுமென்றே ஒப்பந்த அடிப்படையில் நகரமைப்பு வல்லுனர்களை நியமிக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் பின்னணியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us