/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
/
அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி
ADDED : செப் 20, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், மயிலாப்பூரைச் சேர்ந்த அப்துல் சமது மகன் சையது முகமது, 17. பெரம்பூர், ஜமாலியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவர்.
மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் இயங்கும் அரபிக் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த இவர், நேற்று காலை 9:15 மணியளவில், அப்பகுதியிலுள்ள விவசாய கிணற்றில், உடன் தங்கியிருந்த மூன்று பேருடன் குளித்தார்.
அப்போது, நீச்சல் தெரியாத சையது முகமது, நீரில் மூழ்கினார். உடனிருந்தோர் அளித்த தகவலின்படி, மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் வந்து, கிணற்றில் தேடி உடலை மீட்டனர்.
அவரின் தந்தை அப்துல் சமது அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.