sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தியாகராஜ சுவாமி கோவிலில் நீர்மோர் வழங்க ஏற்பாடு

/

தியாகராஜ சுவாமி கோவிலில் நீர்மோர் வழங்க ஏற்பாடு

தியாகராஜ சுவாமி கோவிலில் நீர்மோர் வழங்க ஏற்பாடு

தியாகராஜ சுவாமி கோவிலில் நீர்மோர் வழங்க ஏற்பாடு


ADDED : மார் 26, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். விழாக்காலங்களில் கூட்டம் கட்டுக்கடங்காது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு, திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வடிவுடையம்மன் சன்னதி முன், நேற்று காலை நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்று, பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

தவிர, கோவில் வளாகத்தின் சிமென்ட் தரையில், வெயில் தாக்கம் தெரியாதபடி, வெள்ளை பெயின்ட் அடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கோவில் வளாகத்தில் இருக்கும் மணல் பகுதியில், தேங்காய் நார் தரை விரிப்பான்கள் போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us