sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கணவரை கொன்று நாடகமாடியவர் கைது

/

கணவரை கொன்று நாடகமாடியவர் கைது

கணவரை கொன்று நாடகமாடியவர் கைது

கணவரை கொன்று நாடகமாடியவர் கைது


UPDATED : ஆக 22, 2024 06:18 AM

ADDED : ஆக 22, 2024 12:30 AM

Google News

UPDATED : ஆக 22, 2024 06:18 AM ADDED : ஆக 22, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்ட்ரல் பல்லவன் சாலை, எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 28. இவரது மனைவி நாகம்மாள், 35. நேற்று முன்தினம் இரவு நாகம்மாள், தன் கணவர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக, அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உடனே அவரது உறவினர்கள் வந்து, மணிவண்ணனை ஆட்டோவில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற திருவல்லிக்கேணி போலீசார், மணிவண்ணன் மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரிடம் அவர் கூறியதாவது:

சம்பவத்தன்று, இருவரும் மது அருந்தினோம். அதன் பிறகு, மிருகத்தனமாக,'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துவிட்டு உறங்கிவிட்டார். அவரது செக்ஸ் டார்ச்சரை தாங்க முடியாமல், தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

உடனே, தாலி கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு, போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று, நாகம்மாளை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us