ADDED : மார் 29, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடந்தது.
அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எம்.கே.பி., நகர் உதவி கமிஷனர் பென்சன், திடீரென மயங்கி விழுந்தார். சக போலீசார் அவரை மீட்டு, அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.