sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடிகள் அட்டூழியம் புளியந்தோப்பில் பீதி

/

ரவுடிகள் அட்டூழியம் புளியந்தோப்பில் பீதி

ரவுடிகள் அட்டூழியம் புளியந்தோப்பில் பீதி

ரவுடிகள் அட்டூழியம் புளியந்தோப்பில் பீதி


ADDED : பிப் 13, 2024 12:45 AM

Google News

ADDED : பிப் 13, 2024 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பில் மது போதையில், கூலி தொழிலாளியை வெட்டிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கணேஷ், 34; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு செல்ல குடியிருப்பின் 'லிப்டில்' ஏறி காத்திருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் மூவர் மது போதையில், கணேஷிடம் தகராறு செய்து, கத்தியால் தலையில் வெட்டி தப்பினர்.

கணேஷை உறவினர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கே.பி.பார்க் குடியிருப்பில் கஞ்சா, குட்கா மற்றும் மது விற்பனை, 24 மணி நேரமும் சர்வசாதாரணமாக நடப்பதாக, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேபோல, 24 மணி நேரமும் ரவுடிகளின் அட்டகாசமும், அடிக்கடி வெட்டுக்குத்து சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.






      Dinamalar
      Follow us