sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மாணவர்கள் மீது தாக்குதல்

/

 மாணவர்கள் மீது தாக்குதல்

 மாணவர்கள் மீது தாக்குதல்

 மாணவர்கள் மீது தாக்குதல்


ADDED : பிப் 13, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: கோயம்பேடு, சேமத்தம்மன் நகரைச் சேர்ந்த முருகன், 45 என்பவர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. ஊர்வலத்தில் முருகனின் மகன் கார்த்திக் உடன் படிக்கும் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

மரணமடைந்த முருகனை, அவரது மனைவி சரியாக பராமரிக்கவில்லை என, உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு முருகனின் மகன் கார்த்திக் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மாணவர்களும் நின்றுள்ளனர்.

இதனால் கோயம்பேடு சந்தை 'ஈ' சாலையில் ஊர்வலம் சென்றபோது, மாணவர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அங்கு மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் சில உறவினர்கள், மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள், வலி தாங்க முடியாமல் அங்கிருந்து ஓடியுள்ளனர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us