/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது
/
மாணவிக்கு வன்கொடுமை ஆட்டோ ஓட்டுநர் கைது
ADDED : ஜன 13, 2026 05:30 AM
திருவொற்றியூர்: ஓடும் ஆட்டோவில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கீழே தள்ளி விட்டுச் சென்ற ஆட் டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, 6ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து, பள்ளி செல்வதற்காக ஆட்டோவில் ஏறினார்.
அப்போது, ஆட்டோ ஓட்டுநர் முன் இருக்கையில் அமர்ந்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். மாணவியும் முன் இருக்கையில், ஓட்டுநர் அருகிலேயே அமர்ந்து பயணித்துள்ளார். சி றிது துாரம் சென்றதும், ஓட்டுநர், மாணவியிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார்.
மாணவி இறங்க முயற்சித்து கூச்சலிட்டுள்ளார். பயந்து போன ஓட்டுநர், மாணவியை கீழே தள்ளி ஆட்டோவில் வேகமாக சென்று விட்டார். இதில், மாணவிக்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்ததில் மணலி அடுத்த மாத்துாரைச் சேர்ந்த சண்முகம், 56 என்பவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்றிரவு அவரை போலீசார் கைது செய்தனர்.

