ADDED : அக் 30, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்: வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்.
ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணா, 30. ஆட்டோ ஓட்டுநர். இவர், அதே பகுதியில், வீட்டில் தனியாக இருந்த, 16 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
புகாரின்படி, நேற்று திருவான்மியூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, ஹரிகிருஷ்ணனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

