sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ டிரைவரிடம் ரூ.10,000 மோசடி

/

ஆட்டோ டிரைவரிடம் ரூ.10,000 மோசடி

ஆட்டோ டிரைவரிடம் ரூ.10,000 மோசடி

ஆட்டோ டிரைவரிடம் ரூ.10,000 மோசடி


ADDED : ஏப் 10, 2025 12:05 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், வியாசர்பாடியை சேர்ந்தவர் நாராயணன், 39; ஆட்டோ ஓட்டுநர். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பரமேஸ்வரி என்பவர், நாராயணனிடம், ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.

மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையம் சென்று பணம் எடுக்க முற்பட்டார். அப்போது, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து சென்ற நபர் ஒருவர், மீண்டும் ஏ.டி.எம்., மையத்திற்குள் வந்தார்.

நாராயணன், 10,000 ரூபாய் எடுத்த போது, 'இது என்னுடையது. நான் எடுத்த பணம் இப்போதுதான் வருகிறது' எனக்கூறி, ஏ.டி.எம்.,மில் வந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டார்.

நாராயணன் மீண்டும், 10,000 ரூபாயை எடுத்துள்ளார். பரமேஸ்வரியிடம் பணத்தை கொடுத்த போது, அவர், 'இரண்டு முறை 10,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது' எனக்கூறியுள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாராயணன், செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us