sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

/

 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்

 குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்


ADDED : நவ 19, 2025 04:07 AM

Google News

ADDED : நவ 19, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஆட்டோவை பத்திரமாக சாலையோரம் நிறுத்தி, மயங்கி உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முருகன், 41; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று காலை அண்ணா நகரில், மூன்று பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி, சேத்துப்பட்டு மகரிஷி பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

காலை 8:45 மணிக்கு அண்ணா நகர் 15வது பிரதான சாலையில் சென்றபோது, முருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு என்பதை உணர்ந்த முருகன், வலியை பொருட்படுத்தாமல், குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் வகையில், சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மயங்கினார்.

ஆட்டோவில் இருந்த பள்ளி குழந்தைகள் அலறினர். அங்கிருந்தோர் உதவியுடன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட முருகனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உயிரிழக்கும் முன், தன் ஆட்டோவில் பயணித்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய அவரின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us