/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை
/
ஆட்டோ மெக்கானிக் துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 17, 2024 10:40 PM
திருவொற்றியூர்:திருவொற்றியூர் ராஜாஜி நகர், அம்மன் தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார், 21; ஆட்டோ மெக்கானிக். வழக்கம்போல் நேற்று மாலை, பணியை முடித்து, மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, தந்தை பாலசுப்பிரமணியம் கண்டித்துள்ளார். பின், வீட்டில் இருந்தவர்கள் கடைக்கு சென்றுள்ளனர்.
தனியாக இருந்த உதயகுமார், வீட்டின் மின்விசிறியில், புடவையால் துாக்கிட்டு தொங்கினார். கடைக்கு சென்றவர் திரும்பியவர், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், உதயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுகுறித்து, சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.